பரமக்குடியில் உயர் கல்விக்கான கடன் மேளா:மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2025 2026 ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா முகாம் அடுத்தக்கட்டமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.11.2025 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது.உயர் கல்விக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்விக்கடன் பற்றிய ஆலோசனைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.இம்முகாமில் உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் மற்றும் கல்விக்கடன் குறித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.மாணவர்கள் கல்விக்கடன் பெறும் செயல்முறையினை எளிமைப்படுத்துதல்,பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு நிதி உதவியியை உறுதி செய்தல்,பிரதம மந்திரி வித்யாலெட்சுமி இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறையினை விளக்குதல்,கல்விக்கான நிதி தடையில்லாமல் அனைவரும் உயர்கல்வி பெற வழிவகை செய்தல் இம்முகாமின் நோக்கமாகும்.இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயர் பட்டப்படிப்பு,தொழில்நுட்ப,தொழில்முறை பாடநெறிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் பற்கேற்கலாம்.மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆதார் & பான் கார்டு (மாணவர் & பெற்றோர்), 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விவர பட்டியல், வருமானச் சான்றிதழ், வங்கிகணக்கு எண் (மாணவர் & பெற்றோர்) சாதிச்சான்றிதழ்,பூர்வீகச் சான்றிதழ், புகைப்படம் -4 (மாணவர் & பெற்றோர்) மற்றும் வங்கி கோரும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய கல்வி கடன் மேளா முகாம்களில் வங்கிகள் நேரிடையாக பங்கேற்று பிரதம மந்திரி வித்யாலெட்சுமி இணையதளம் மூலம் பதிவு செய்து உடனடியாக கல்விக்கடன் வழங்கப்படும் என்பதால் விருப்பமுள்ள மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



