இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் கோலாகலம்:சிறப்பு வழிபாடு நடத்தி கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது:மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் ஏற்பாடு!!!

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி,கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் ஏற்பாட்டில் மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் இரா.கருமாணிக்கம் எம்.எல்.ஏ தலைமையில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவர் உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டி கோட்டை வாசல் பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதனைதொடர்ந்து,மாவட்ட கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.அதன் பின்னர் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் தலைமையில் நடைபெற்றது.எம்.எல்.ஏ இராம.கருமாணிக்கம் கேக் வெட்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.

நலிந்தோருக்கு வேஷ்டி,சேலை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன்,நகர் தலைவர் கோபி,வட்டார தலைவர்கள் காருகுடி சேகர்,சேதுபாண்டியன்,பனைக்குளம் அன்வர் அலி நத்தர்,மாநில செயலர் குமார்,மற்றும் நிர்வாகிகள் பனைக்குளம் ஹனிப் கான்,நேரு,கோபால்,பாஸ்கரசேதுபதி,இராமேஸ்வரம் நகர் தலைவர் பாபா செந்தில் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.



