தமிழகம்மாவட்டச் செய்திகள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா:மாணவிகள் கவிதை கூறி அசத்தல்!!!

சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.விழாவில் சிறப்பாக கவிதை கூறிய மாணவிகள் ஜெபிகா,ஸ்டெபி,நந்தனா,ரித்திகா,ஏஞ்சல் ஜாய்,ரக்ஷிதா,ஜாய் லின்சிகா ஆகியோருக்கும்,பாரதியார் படம் வரைதல் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாலினி,யோகின்,சர்வேஸ்வரன் ஆகியோருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.முடிவில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.



