திருநெல்வேலி – சென்னை கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு ரயில்!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி திருநெல்வேலி – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06166) திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06165) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய ச
திங்கட்கிழமைகளில் மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி,சாத்தூர்,விருதுநகர்,மதுரை,திண்டுக்கல்,திருச்சி,விருத்தாச்சலம்,விழுப்புரம்,மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி,2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்,2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (டிசம்பர் 18) காலை 8 மணிக்கு துவங்குகிறது.



