தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிவிப்பு!!!

இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,தமிழ்நாடு துணை முதல்வர்,தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும்,தலைமைக்கழக அறிவிப்பின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை  24.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இக்கண்டன ஆர்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாநில,மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தோழர்கள்,கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,அணிகளின் நிர்வாகிகள்,கிளைக் கழக,வார்டு கழக செயலாளர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,BLA2,BDA, உள்ளிட்ட கழக தோழர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 100நாள் வேலை திட்ட பயனாளிகள் உடன் தவறாது கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button