உச்சிப்புளி கிராமத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் பனை ஓலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம்!!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் ராம்நாட் பனை ஒலை உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும் பனை ஓலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் 30 பெண்களுக்கு 25 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி முகாமை நாகர்கோவில் கைவினை பொருட்கள் சேவை மைய அதிகாரி விகாஸ் ரதி தொடங்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் பனை ஓலை உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் கல்யாணி,கைவினைபொருட்கள் உச்சிப்புளி கிராமத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் பனை ஓலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்கம்வடிவமைப்பாளர்,பிரிஜேஷ் குமார் ஜெய்ஸ்வால்,ராமநாதபுரம் முதன்மை கைவினைஞர் எம்சிபி(பயிற்சியாளர்), சிந்தாமணி,ராமநாதபுரம் காலம் மீனவ உற்பத்தியாளர் நிறுவன சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்துகொண்ட 30 பெண்களுக்கு வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையிலான கருத்துகளை எடுத்துரைத்தனர்.



